Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கெலிஓயவில் ஒருவர்க்கு கொரோனா!.. உடுநுவர பிரதேச சபையின் நடவடிக்கைகள் நிறுத்தம்!.

கெலிஓய பிரதேச சபைக்கு அண்மித்த பகுதியில் கொரோனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உடுநுவர பிரதேச சபையின் அத்தியவசிய சேவைகளை தவிர அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உடுநுவர பிரதேச சபை தலைவர் காமினி தென்னகோன் அவர்கள் தெரிவித்தார். 

அண்மையில் கொரோனா நோயாளி  உடுநுவர பிரதேச சபைக்கு விஜயம் செய்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது எனவும்  சபைக்கு வந்து சென்ற யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த கொரோனா நோயாளி ஹலாவத்தையில் உள்ள கொரோனா தனிமை படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்.

மேலும் அவருடன் இருந்த நண்பர்களையும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்,அவசர கால நிலைமை ஏற்பட்டால் அப்பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் உடுநுவர பிரதேச சபை தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-Fastnews1stமுதல்வேகச்செய்தி-

Post a Comment

0 Comments