
குருநாகல் நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகஸ்கொட்டுவ, கிலும்பொல
எனும் இடத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடையொன்றும் மூன்று ஹோட்டல்களும்
தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளன.இன்று அதிகாலை இனம் தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ள கடைகளின்
உரிமையாளர்கள் சம்பவம் தொடர்பில் நாரம்மல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்துள்ளனர்.ஹோட்டல்களின்
பெறுமதி வாய்ந்த கண்ணாடியிலான தளபாடங்கள்
நொறுக்கப்பட்டுள்ளதுடன், கூரைகளும் சேதத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
இலட்சக்கணக்கான நஷ்டமேற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments