
ஏற்பட்டுள்ள நிலையிலேயே பொன்டெராவின் பால் உற்பத்திகளுக்கான முகாமைப் பணிப்பாளரான காரி ரமனோ பதவி விலகியுள்ளதாக மேற்படி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள குறுகிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது பதவி விலகல் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள பொன்டெரா, அவர் பதவிவிலகுவதற்கான காரணம் குறித்து எதுவித விமர்சனத்தையும் வெளியிடவில்லை.
‘‘காரி தனது பதவிக் காலத்தில் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளார். பொன்டெரா அவரது தீர்மானத்துக்கு கெளரவமளிக்கிறது’ என பொன்டெராவின் தலைமை நிறைவேற்றதிகாரி தியோ ஸ்பியறிங்ஸ் தெரிவித்தார்.
0 Comments