Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

முர்ஸிக்கு வீட்டுக்காவல் - வெளிநாட்டிற்கு செல்வதை தடுக்கவும் ஏற்பாடு

அதிபரை நீக்க வலியுறுத்தி நடைபெறற போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து ராணுவம் அதிபர் மோர்ஸி பதவி விலக 48 மணி நேரம் கெடு விடுத்தது. ராணுவம் விடுத்திருந்த கெடு முடிந்தநிலையில் ராணுவம் தலைநகர் கெய்ரோவில் உள்ள அதிபர் மாளிகையை அதிரடியாக முற்றுகையிட்டது. இதனை ‌தொடர்ந்து அதிபர் பதவி விலகியதாகவும், அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்வதாகவும் ராணுவம் அதிரடியாக
அறிவித்தது. மேலும் விரைவில் தேர்தல நடைபெற நடவடிக்‌கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக எகிப்து நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபயான மகர் எல் பெஹய்ரி இடைக்கால அதிபராக பதவி வகிப்பார் என ராணுவ தளபதி அபடெல் அல் சிசி தெரிவித்துள்ளார் . முன்னதாக அதிபர் மோர்ஸியில் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த நான்கு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் பதவி நீக்கம் செய்யப்பட்ட மோர்ஸி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாட்டிற்கு செல்வதை தடுக்கவும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments