
தமிழர்களின் குறைகளைத் தீர்க்கும் நிறைவான அரசியல் தீர்வொன்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது எனவும் அது ராஜபக்ஷ - சம்பந்தன் ஒப்பந்தமாக அமையக்கூடாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
"நிறைவான அரசியல் தீர்வொன்றை காண அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
எம்மால் ஒரு தீர்வை இறக்குமதி செய்ய முடியாது. அரசியல் தீர்வு ராஜபக்ஷ - சம்பந்தன் ஒப்பந்தமாக அமையக்கூடாது" என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சி குழுவினரை இன்று (07) அலரிமாளிகையில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
0 Comments