
இராஜினாமாவுக்கு முன் மக்கள் முன் தோன்றும் கடைசி நிகழ்வாக இது கருதப்படுகிறது.இதனால் பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் பங்கேற் றிருந்தனர். “உங்களது அன்பு மற்றும் பிரார்த்தனைக்காக நன்றிகளை தெரிவிக்கிறேன். எனக்காகவும் திருச்சபைக்காகவும் எதிர்கால பாப்பரசருக்காகவும் பிரார்த்தியுகள்” என்று பாப்பரசர் இதன்போது தெரிவித்தார்.
இதனிடையே 85 வயதான பாப்பரசர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இதய சத்திர சிகிச்சை மேற்கொண்டதாக வத்திக்கான் தற்போது கூறியுள்ளது.
எனினும் அவரது பதவி விலகலுக்கு இது காரணம் அல்ல என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. எனினும் தனது வயது முதிர்ச்சி காரணமாகவே பதவி விலகுவதாக பாப்பரசர் குறிப்பிட்டிருந்தார்.
0 Comments