சட்டத்தின்
முன் அனைவரும் சமமானவர்கள் என்பதனால் எந்த தரத்தைச் சேர்ந்த அதிகாரிகளாக
இருந்தாலும் தண்டனை வழங்கப்படவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
தெரிவித்துள்ளார்.
தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் மக்களின் நலன் கருதி
அமைக்கப்பட்டுள்ள சகல வசதிகளையும் கொண்ட கெனோவின் ஆர்கேட் விடுதி கட்டடத்
தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே
ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
எவர் மீதும் பழிவாங்கும் தேவை எமக்கில்லை, நான் அவ்வாறு பழிவாங்கும் ஒரு
மனிதர் அல்லவெனவும் நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments