சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப்
போட்டியில் இலங்கை மாணவனான ரிப்தி முஹம்மத் ரிஸ்கான் முதலாம் இடத்தைப்
பெற்றுள்ளார். என்று அறிவிக்கப்பட்டுள்ளது .83 நாடுகள்
பங்கு பற்றிய இந்த சர்வதேச போட்டியில் கொழும்பு பெரிய பள்ளிவாசலில்
அமைந்துள்ள மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரியின் மாணவரே முதலாமிடத்தை
பெற்றுள்ளார்.
சர்வதேச ரீதியில் நடைபெற்ற இந்தப்
போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்து
, நாடு திரும்பும் மாணவன் ரிஸ்கானுக்கு இன்று விமான நிலையத்தில்
வரவேற்பளிக்கப்படவுள்ளது.
0 Comments