கொரோனா தொற்றால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று பிற்பகல் 02.30 மணியளவில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான முஸ்லிம் மக்கள் பங்கேற்றிருந்தனர்.
ஜனாஸா கட்டாய தகனத்துக்கு எதிரான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு இருந்தனர்.
0 Comments