அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே ஜோ பைடன் செயற்பட தொடங்கி, ஒரே நாளில் அவர் அதிரடியாக 15 நிர்வாக உத்தரவுகளையும் பிறப்பித்தார்.
அவற்றுள் பெரும்பாலானவை முன்னாள் அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த தடைகளை நீக்கும் உத்தரவுகள் ஆகும்.
இவற்றுள் ஒன்றாக, அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த தடையை நீக்கும் உத்தரவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டு அதிபர் பைடன்,
உலகளவில் அமெரிக்கா வலிமையான, அனைவருக்கும் ஏற்ற நாடு
அதில் இராணுவம் எந்தவிதத்திலும் சளைத்தது இல்லை. இராணுவத்தின் நலனுக்காகவும், தேசத்தின் நன்மைக்காகவும் தகுதிவாய்ந்த அனைத்து அமெரிக்க மக்களும் இராணுவத்தில் பணியாற்றலாம்.
பாலினத்தின் அடிப்படையில் இராணுவத்தில் எந்தப் பாகுபாடும் இருக்கக்கூடாது.
தகுதியுள்ள அனைவரும் ,வெளிப்படையாகவும் பெருமையுடனும் சேவை செய்யும்போது அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கும்.
அதனாலேயே மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை - கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மூன்றாம் பாலினத்தவர்கள் இராணுவத்தில் சேர வழிவகை செய்தார்.
ஒபாமாவின் இந்த உத்தரவை பின்னர் வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நீக்கினார்.
இதன் அடிப்படையில், அமெரிக்க இராணுவத்தில் ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பணி புரியலாம் என்றும், இராணுவத்தில் புதிதாக மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதற்கு தடைவிதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments