இது தொடர்பா கண்டி சமூகஆர்வலரும்,உமா பவுண்டேஷன் தலைவருமான எம்.தீபன் அவர்கள் இலகுவான மூலிகை மருந்துகளும் அவற்றினை பிரயோகிக்கும் முறைகளுடன் கூடிய ஒரு இயற்கை மருத்துவ அறிவுரையை நமக்கு வழங்கியிருந்தார்.
முதலாவதாக சுடு நீராவி பிடித்தல்
+++++++++++++++
இது தும்மல் மற்றும் நாசித்துவாரத்தின் மூலம் நீர் வடிதல் உடையவர்களுக்கு மிகவும் சிறந்தது . ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று விடுத்தமாவது நீராவி பிடித்தல் மிகவும் நல்லது .
1-முதல் நேரமாக காலை எழுந்தவுடன் 5 நிமிடங்கள்.
2-இரண்டாவது நேரமாக பகல் 1 மணியளவில் 5 நிமிடங்கள்.
3-மூன்றாவது நேரமாக இரவு நித்திரைக்கு செல்ல முன்னர் 5 நிமிடங்கள்.
இச் செயற்பாட்டின் மூலம் நாசியின் உட்பகுதியில் காணப்படும் வைரஸ் கிருமிகளை அழிக்கக் கூடியதாக உள்ளது.
2 பருகக் கூடிய அதிகளவு சூட்டுடன் சுடுநீர் பருகுதல்
+++++++++++++++
இது தொண்டை நோவு , தொண்டை அலர்ச்சி , இருமல் உடையவர்களுக்கு மிகவும் சிறந்தது.ஒரு நாளைக்கு குறைந்தது 5 தடவைகளாவது 200 ml அளவில் சுடுநீர் பருகுவது மிகவும் நல்லது.இச் செயற்பாட்டின் மூலம் தொண்டையில் காணப்படும் வைரஸ் கிருமிகளை அழிக்க வல்லது.
3 இஞ்சி கொத்தமல்லி கசாயம் பருகுதல்
+++++++++++++++
இது தேனீர் பருகும் வேலையில் 1 தேனீர் கப் அளவில் ( 150 ml ) , இஞ்சி , கொத்தமல்லி கசாயம் ஒன்றை தயாரித்து ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு தடவைகளாவது பருகுதல் வேண்டும்.
4 தூய தேன் பருகுதல்
+++++++++++++++
தேனில் அதிகளவில் "எண்டி ஒக்சிடன்ட்" ( Antioxidunts ) காணப்படுவதினாலும் , மருத்துவக் குணமுடைய பல இரசாயனப் பதார்த்தங்கள் காணப்படுவதினாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதும் நோயிக்காரணிகளுக்கு எதிராக தொழிற்படக்கூடியதுமாக இத் தேன் செயற்படுகின்றது . தூய தேனானது 4 தேக்கரண்டி வீதம் ( 20 ml ) ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் பருகுதல் வேண்டும் .
* முதலாவது காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில்.
* இரண்டாவதாக இரவு படுக்கைக்கு செல்ல முன்னர்.
இவைகளை முறைப்படி செய்வதன் மூலம் வைரஸ் கிருமிகளின் நோய்த்தாங்களில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்!
-Fastnews1stமுதல்வேகச்செய்தி-
0 Comments