
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை பதிவு செய்வதற்கான இந்த விசேட சட்டமூலம் அரசியல் அமைப்புக்கு
உட்பட்டதென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கடந்த 5ஆம் திகதி அறிவித்திருந்தார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.
இடம்பெயர்ந்தவர்கள் முன்னர் இருந்த இடத்திலேயே வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதோடு இரண்டு இடங்களில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
0 Comments