சீனாவின் யுனான் மாகாணத்தில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது.
1,000 அடி நீளம் கொண்ட இந்தப் பாலம், மூன்று கால்பந்து மைதானங்களைக் கடக்கும் அளவுக்கு நீளமானது.பாலத்தின் அடிப்பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டு, 600 அடி கீழே இருக்கும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே செல்லும் விதத்தில்
உருவாக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது இந்தக் கண்ணாடிப் பாலம்.
உயரத்தைக் கண்டு பயப்படுகிறவர்களுக்கு கண்ணாடியில் கால் வைத்தவுடன், பயத்தில் கால்கள் தொடர்ந்து நடக்க மறுக்கவும் செய்கிறதாம்.