வடமேல் மாகாணத்தில் பிரதேச சபைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவர் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளனர்.இந்தக் குழுவினர் இன்று முற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து, தமது ஆதரவை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட பிரதேச சபை பிரதிநிதிகளில், பண்டுவஸ்நுவர எதிர்க்கட்சித் தலைவர் சமத்சிறி பீரிஸ், நாரம்மல பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரோஹன ஸ்ரீ தினபூர்ண ஆகியோரும் அடங்குகின்றனர்.

0 Comments