ganasara deroநாட்டிலுள்ள சிறுபான்மை அமைப்புகள் மீது இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் உத்தியாகபூர்வமற்ற பொலிஸ்காரராகிய எங்களது அமைப்பு தாக்குதல் நடத்துமென பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர், தலைமையகத்தில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பில் அங்கு கருத்து
வெளியிட்ட ஞானசார தேரர்; எதிர்வரும் எசல போயா தினத்திற்கு முன்னர் நாட்டிலுள்ள சகல சிறுபான்மை அமைப்புகள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிடில் உத்தியோகபூர்வமற்ற பொலிஸ்காரராகிய நாங்கள் குறித்த அமைப்புகள் மீது தாக்குதல்களை மேற்கொள்வோம்.
இனிமேல் சிங்க கிராமங்களுக்குள் நுழையும் வேறு இனத்தவர்களை அடித்து விரட்டுவதற்காக பெளத்த பாதுகாப்பு குழுக்களை நியமிப்பதற்கு எமது அமைப்பு தீர்மானித்துள்ள மேலும் தெரிவித்தார்.