48 மணத்தியால நீர் வெட்டு கண்டி, குண்டசாலை நீர்வழங்கல் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் பலவற்றிற்கு நாளை மறுதினம் தொடக்கம் 48 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் வியாழக்கிழமை காலை 8.00 மணிவரை இந்நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


லியன்கஹவதுர, தெல்கஸ்லந்த, இகலகொனாகம, குருஅபேமுதுண, நாரம்பனாவ வீதி, ஒருதொட வீதி, உடகம உட்பட பல பிரதேசங்களிற்கான நீர் விநியோகம் இதன்போது தடைப்படவுள்ளது.