பரீட்சைக்கு முன் கணித வினாத்தாள் வெளியானதா?கா.பொ.த சாதாரணதர பரீட்சையில் இன்று (17) நடைபெறும் கணித பாட வினாத்தாள், பரீட்சைக்கு முன்னர் சில பிரதேசங்களில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் கலந்துரையாடப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பரீட்சைகள் ஆணையாளரால், பொலிஸாருக்கு
வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் படி இந்த விசாரணை மெற்கொள்ளபபட்டதாக தெரிவிக்கபபடுகின்றது.

சிதுல்கல மற்றும் நாவலபிட்டிய போன்ற பிரதேசங்களில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பில், குறித்த ஆசிரியரிடம் விசாரணை செய்த பின்னர் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னர் வெளியிடப்படவில்லை என தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



-AD-