மாடுகளை இறைச்சிக்காக எடுத்துச் சென்ற 7 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் மாடுகளை இறைச்சிக்காக எடுத்துச் சென்ற ஏழு பேர் பொத்துவில், களப்புகட்டுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் அறுகப்பே பொலிஸார் இணைந்து இவர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இறைச்சிக்காக 20 மாடுகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொதுவில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.