சரத் பொன்சேகாவை கொலை செய்ய திட்டமிட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினருக்கு உதவி செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு எஸ்.சூரியகுமார் என்பவரை 35 வருடங்கள் சிறையில் வைக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு இன்று (23) கேகாலை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிபதி மேனகா விஜேசுந்தர இத்தீர்ப்பை அளித்தார். சூரியகுமார் என்பவர் ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்தவராவார்.